சக்ர ஹர்ஜி விஷ்ணு கோவில் பைசாபாத்தில் உள்ள குப்தர் காட்தில், சர்யு நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து மதத்தினரை ஈர்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன; முதல் காரணம், விஷ்ணு பெருமானின் கையில் சக்கரம் இருப்பதைப் போன்ற சிலையாகும். பொதுவாக கிருஷ்ணா பரமாத்மாவின் கையில் தான் இந்த சக்கரம் இருக்கும்.
இது துஷ்தர்களை போர்களத்தில் அழிக்க பயன்படுத்தப்படும். ஆனால் விஷ்ணுவின் கையில் இந்த சக்கரத்தை காண்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.
மற்றொரு காரணம், ஸ்ரீ ராமரின் பாதத் தடங்களை இங்கே காணலாம். கடவுளின் கால் தடம் என்பதால் ஹிந்துக்கள் மத்தியில் இது பெரிதும் ஈர்க்கும் இடமாக அமைந்துள்ளது.
இந்த கோவிலில் மற்ற கடவுள்களின் சிலைகளும் உள்ளன. நதிக்கரையில் கோவிலோடு இருக்கும் இந்த இடத்தை காணும் பொழுது அமைதியின் சொரூபமாக விளங்கும்.