அயோத்யா நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தசரத் பவன். ஸ்ரீ ராமரின் தந்தையான தசரத மகாராஜாவின் அரண்மனை இருந்ததாக நம்பப்படும் இடத்தில் தான் இந்த பவனம் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமர் அவருடைய சகோதரர்களுடன் தன்னுடைய குழந்தை மற்றும் வாலிபப் பருவத்தை இங்கு தான் கழித்தார் என்றும் நம்பப்படுகிறது.
இந்த பவனில் ஸ்ரீ ராமர், லக்ஷ்மணன் மற்றும் சீதா தேவியின் விக்கிரகங்கள் உள்ளது. இந்த கோவிலின் நுழை வாயில் மிகவும் பெரியதாகவும் வண்ணமயமாகவும் இருக்கும்.
இந்த கோவிலுக்குச் சென்றால் அதன் சமயஞ்சார்ந்த செயல்பாடுகளால் நீங்கள் கண்டிப்பாக ஈர்க்கப்படுவீர்கள். சாதுக்களும் சன்யாசிகளும் காவி நிற உடைகள் அணிந்து ராமாயணத்திலிருந்து கவிதைகளும் சொற்பொழிவுகளும் ஆற்றிய வண்ணம் இருப்பர். அதற்கு இசை மீட்டும் குழுவும் உடன் இருக்கும்.
தசரத மகாராஜாவின் அரண்மனையை ஒப்பிடுகையில் இந்த பவன் மிகவும் சொற்ப அளவே இருக்கும். ஆனாலும் இது ஸ்ரீ ராமர் பிறந்து வளர்ந்த இடம் என்பதால் இங்கு அதிகமாக பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பர்.