சீதா கி ரசோய் என்பது அரசு குடும்பத்தைச் சேர்ந்த சமையலறை என்று கூறுவதை விட அதனை கோவில் என்று தான் கூற வேண்டும். இது ராம் ஜனமஸ்தானிற்கு வட மேற்கு திசையில் அமைந்துள்ளது.
மேலும் இது அயோத்யா, ராம்கோட் தொகுதியில் உள்ள ராம் சபூத்ரா திடலுக்கு அருகில் உள்ளது. இந்த கோவிலில் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்களான ராமர், லக்ஷ்மணன், பரதன் மற்றும் சத்ருகனின் சிலைகள் உள்ளன. மேலும் அவர்களின் மனைவிகளான சீதா, ஊர்மிளா, மண்ட்வி மற்றும் ஸ்ருடிக்ரிடியின் சிலைகளும் இங்கே காணப்படுகின்றன.
இந்த சமயலறையில் மாவு உருட்டும் தட்டுக்கள் மற்றும் கட்டைகள் போன்ற குறியீட்டு சமையல் பண்டங்களை காணலாம். அரச குடும்ப மரபு படி, புதிதாக வந்த மருமகள்கள் இங்கே தான் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் சமைக்க வேண்டும்.
இருப்பினும் புராணத்தின் படி, அன்னப்பூர்ண தேவியைப் போல, சீதா தேவி, தன் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்குமே சமைத்தார் என்று நம்பப்படுகிறது.
இங்குள்ள மற்றொரு சுவாரசியம் என்னவென்றால், சீதா கி ரசோய் இருப்பதற்கான சான்றை பாப்ரி மஸ்ஜித்தின் முதன்மை வளைவில் காணலாம். அதில் "ஜன்மஸ்தான் சீதா கி ரசோய்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டுப்பிடித்தவர் இந்தியாவைச் சேர்ந்த புகழ் பெற்ற வரலாற்று வல்லுநர் மற்றும் மெய்நூலறிஞரான ராம் சந்தர் காந்தி ஆவார். இவர் மகாத்மா காந்தியின் பேரன் ஆவார்.