முர்சிங் என்பது ஒரிசாவைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வசித்து வரும் ஒரு பழமையான கிராமம் ஆகும். இந்த இடத்தில் தான் விஷ்ணுவின் நான்காம் அவதாரமான நரசிம்மர் முரா என்கிற அரக்கனை வதம் புரிந்ததாக நம்பப்படுகின்றது.
ஆகவே இந்த இடம் நரசிங்க என்கிற சொல்லில் இருந்து இந்தப் பெயரை பெற்றுள்ளது. முரா என்கிற அந்த அரக்கன் நரசிங்கத்துடன் என்றென்றும் தொடர்பில் இருப்பதற்கான வரத்தைப் பெற்றான்.
இந்த இடத்தில் வைணவத்தை சேர்ந்த பல்வேறு கடவுள்களுக்கான மிகப் பிரம்மாண்டமான கோவில்கள் இல்லை எனினும் இங்கு கொண்டாடப்படும் சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் பூரியில் கொண்டாடப்படும் விழாக்களுக்கு ஒன்றும் சளைத்ததல்ல.
தற்போது, அழகான சிலைகள் சாதரண கட்டிடத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பல்வேறு சடங்குள் மற்றும் வழிபாடுகள் இந்து மத விதிமுறைகளின் படி கொண்டாடப்படுகின்றன. இங்குள்ள சில சிலைகள், தேர் திருவிழாவின் பொழுது இந்த கிராமம் முழுவதும் வீதி உலா வருகின்றன.
இறைவன் ஜகன்நாதரின் பரம்பக்தரான பள்ளி ஆசிரியர் பிஜாய் குமார் மொகந்தின் வழிகாட்டுதலின் கீழ், பூரி அரசரின் ராஜகுரு கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்பட்டார்.