பாந்தவ்கார் ஹில் கடல் மட்டத்திலிருந்து 807 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதுவே பாந்தவ்கார் சரணாலயத்தின் மிக உயர்ந்த மலை ஆகும். இந்த மலை மணல் மற்றும் சரளைக் கற்களால் ஆனது. எனவே இந்த மலையை தண்ணீர் ஊடுருவிச் செல்கிறது.
அது இந்த இடத்தின் மிகப் பெரிய வரமாகும். இந்த தனிப்பட்ட உருவாக்கத்தின் விளைவாக, இந்த மலையில் பல நீரூற்றுகள் உள்ளன. மேலும் இங்கிருந்து பல நீரோடைகள் உருவாகின்றன.
இந்த மலையின் கிழக்கு பகுதியில் `சன்', மற்றும் `ஜொகிலா' நதிகள் ஓடுகிறது. மேற்கு பகுதியில் `உம்ரார்' நதி ஓடுகிறது. பாந்தவ்கார் மலையின் உச்சிகள் பெரும்பாலும் தட்டையாகவே உள்ளது.
மேலும் அந்த புல்வெளிகள் சதுப்பு நிலங்களக காணப்படுகின்றன. இந்த மலை சரிவுகளில் பல்வேறு மூங்கில் மற்றும் சல் மரங்களால் நிறைந்து காணப்படுகிறது.
இங்கு பூச்சிகளை உண்ணும் அரிய வகை தாவரமன ட்ரொசெர பெல்டாடா போன்றவை இங்கு உள்ள அச்கொரஸ் கலாமஸ் அல்லது புச் போன்ற தாவரத்துடன் இணைந்து காணப்படுகின்றன.
பாந்தவ்கார் ஹில் அதன் அழகிய கண்ணுக்கினிய இயற்கை அழகு மற்றும் குளிர் காலநிலைக்கு மிகவும் பிரபலமானது. மலைகளின் மனதை மயக்கும் பார்வையை நாம் சுமார் 30 கி. மீ. தொலைவில் இருந்தும் பார்க்க முடியும்.