கர்நாடகா உயர்நீதிமன்றம் அதன் பாரம்பரியமான வடிவமைப்புக்கு புகழ் பெற்று விளங்குகிறது. பெங்களூர் அம்பேத்கர் சாலையில் விதான சௌதா எனப்படும் மாநில சட்டசபைக்கு நேர் எதிரிலேயே இந்த உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது. சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் அட்டர கச்சேரி என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் மைசூர் ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட பகுதியின் பிரதான நீதிமன்றமாக முதலில் இது உருவாக்கப்பட்டது. 1921ம் ஆண்டு இது கர்நாடகா உயர் நீதி மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நியோகிளாசிகல் கட்டிடக்கலை வடிவமைப்புக்கு இந்த நீதிமன்ற கட்டிடம் நல்ல உதாரணமாகும்.‘ஓல்டு பப்ளிக் ஹவுஸ்’ என்று அறியப்பட்ட இந்த நீதி மன்றக் கட்டிடம் மைசூர் திப்பு சுல்தான் அரண்மனையிலிருந்து 18 பொது அரசாங்க அலுவலகங்கள் இங்கு மாற்றப்பட்டதில் இருந்து அட்டர கச்சேரி என்று அழைக்கப்பட்டது. அட்டர கச்சேரி என்றால் 18 அலுவலகங்கள் என்பது பொருளாகும். இடிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட இந்த பழமையான கட்டிடம் பொது நல வழக்கு ஒன்றின் மூலம் தடுக்கப்பட்டு நீதிமன்ற தலையீட்டின் மூலம் இடிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது.