பெங்களூரிலிருந்து 21 கி.மீ தொலைவில் கர்நாடகத்தின் கிராமியப்பகுதியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியால் 1981ல் இது துவங்கப்பட்டது. இந்த ஆசிரமத்தின் லட்சியம் மன அழுத்தங்கள் அற்ற, வன்முறைகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவதாகும்.
இப்போது இந்த ஆசிரமத்தின் கொள்கைகள் 150 நாடுகளைசேர்ந்த 300 மில்லியன் சீடர்களை சென்றடைந்திருக்கிறது. அவர்கள் யாவருக்குமே இந்த மையம் ஒரு தலைமையகமாக விளங்குகிறது. இந்த மையம் தன் செயல்பாடுகளை ஒரு சமூக வியாபாரம் என்ற அடிப்படையில் கொண்டிருக்கிறது.
யோகா மற்றும் தியான முகாம்கள் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை இறுக்கங்களிலிருந்து விடுபடுவதற்காக இங்கே நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த முகாம்கள் தற்சமயம் உலகெங்கும் பிரசித்தி பெற்றுள்ளன.ஆன்மீக மற்றும் சமூக செயல்பாடுகள் சார்ந்த அமைப்பான இது பல மனிதநேய திட்டங்களில் பங்கெடுத்து CONGO போன்ற அமைப்புகளில் உறுப்பினராகவும் உள்ளது.
இங்கு ஆர்ட் ஆஃப் லிவிங், மெடிட்டேஷன் போன்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகிறது. எனவே பெங்களூர் வரும்போது இந்த மையத்துக்கு விஜயம் செய்யவும் இரண்டு நாட்கள் ஒதுக்கினால் திரும்பும்போது ஆன்ம மலர்ச்சியுடன் திரும்பலாம்.