பெங்களூர் நகரத்தின் வட கிழக்கு பகுதியில் எம்.ஜி ரோடுக்கு அருகில் உல்சூர் ஏரி அமைந்துள்ளது. பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடாவால் இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது. 1.5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரியில் குட்டி குட்டி தீவுகள் காணப்படுகின்றன. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கு கணேசா திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.
பொழுதுபோக்கு அம்சங்களுக்கென்றே ஒரு தனி வளாகம் இங்கு காணப்படுகிறது. நீச்சல் குளம் ஒன்றும் அதில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. உல்சூர் ஏரிப்பகுதியில் உள்ள குருத்வாரா பெங்களூர் பகுதியிலேயே பெரிய சீக்கிய கோயிலாகும்.படகுச்சவாரி இந்த ஏரியில் பிரசித்தி பெற்ற பொழுது போக்காக விளங்குகிறது.
இங்குள்ள படகு முகாமில் சிற்றுலா செல்வதற்கென்று படகு சவாரிகள் உள்ளன. இவை ஏரியில் உள்ள சிறு தீவுகளுக்கு பயணிகளை அழைத்து சென்று திரும்பவும் கரை சேர்க்கின்றன.
1.5 ச.கி.மீ பரப்பில் நீர்பிடிப்பு பகுதிகளைக் கொண்டுள்ள இந்த ஏரிக்கு மூன்று முக்கியமான வடிகால்கள் மூலம் நீர் வரத்து உள்ளது. ஏரியின் எழிலை பாதுகாப்பதற்காக கடுமையான விதிமுறைகளும், மேலும் அழகுபடுத்துவதற்காக புதிய திட்டங்களும் அமுலில் உள்ளன.
உல்சூர் ஏரியிலிருந்து எம்.ஜி ரோடு நடந்து செல்லும் தூரத்திலேயே உள்ளது குறிப்பிடத் தக்கது. அருகிலுள்ள ஹலசூரு வரையில் ஒரு மெட்ரோ ரயில் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.