பன்ஸ்வாரா நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள பீம் குண்ட் ஒரு அழகிய இடமாகும். நாட்டுப்புற கதைகளின்படி இது மஹாபாரத பாண்டவர்கள் வனவாசத்தின்போது வசித்த இடமாக சொல்லப்படுகிறது.
இங்குள்ள ஒரு சுரங்கப்பாதை வெகு தூரத்திலுள்ள கோதியா அம்பா எனும் இடம் வரை செல்வதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மழைக்காலத்தில் இந்த சுரங்கப்பாதையை பாண்டவர்கள் பயன்படுத்தியதாக மக்கள் நம்புகின்றனர்.