பாராபங்கி கண்டாகர் எனப்படும் இந்த மணிக்கூண்டு நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கிறது. மேலும் நகரத்திற்குள் வாகனங்கள் நுழைவாயிலாகவும் பயன்படுகிறது.
கல்லால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த அலங்கார வளைவு வாயிலில் உள்ள கோபுரம் இந்திய நேரத்தை காண்பிக்கிறது. நகரின் முக்கிய அடையாளமாக அமைந்திருக்கும் இந்த மணிக்கூண்டு அமைப்பில் கலையம்சம் நிரம்பிய சித்திரப்பொறிப்புகள் நிரம்பியுள்ளன. சுற்றுலாப்பயணிகள் விரும்பி ரசிக்கும் ஒரு அம்சமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.