ஹாஜி வாரிஸ் அலி ஷா எனும் சுஃபி ஞானியின் கல்லறைக்காக இந்த தீவா அல்லது தீவா ஷெரிஃப் எனும் இடம் பிரசித்தி பெற்றிருக்கிறது. இவர் ‘மனித குலம் யாவற்றிற்கும் பொதுவான அன்பு’ எனும் கருத்தை வலியுறுத்தியவர் ஆவார். கலையம்சம் நிரம்பிய நினைவுச்சின்னமாக அவரது கல்லறை வளாகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நினைவுச்சின்னம் அமைந்திருக்கும் இதே இடத்தில் அந்த யோகி மரணமடைந்ததாக சொல்லப்படுகிறது. எனவே இந்த இடத்திலேயே அவரது உடல் புதைக்கப்பட்டு அவரது சீடர்களால் நினைவு சின்னமும் எழுப்பப்பட்டிருக்கிறது. நடமாட்டம் அதிகம் இல்லாத இந்த அமைதிப்பிரதேசம் பயணிகளால் விரும்பி ரசிக்கப்படுகிறது.