பாரிஜாத் மரம் எனப்படும் இது உலகத்திலேயே இது போன்ற ஒரே வகை என்பதாக புகழ் பெற்றிருக்கிறது. இருபால் தாவர இயல்பை கொண்டிருக்கும் இது மகரந்த சேர்க்கை இல்லாமலேயே சுய இனப்பெருக்கம் செய்துகொள்கிறது. மேலும் இந்த மரம் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
இந்த மரத்தின் இலைகள் ஐந்து முனைகளை கொண்டதாக மனிதக்கையின் வடிவத்தில் காட்சியளிக்கிறது. இதன் மலர்கள் மிக அழகான தோற்றத்தை கொண்டிருப்பதோடு அற்புதமான சுகந்தத்தையும் வீசுகிறது. இதுபோன்ற வேறொரு மரத்தை சொர்க்கத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்பதாக உள்ளூர் கதைகள் கூறுகின்றன.