சத்ரிக் எனும் வரலாற்று நகரம் பாராபங்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. அரச குடும்பத்தினரின் ராஜகுரு வசித்த இடமான இந்த ஊரில்தான் அவர் ராஜகுடும்ப இளவரசர்களுக்கு சிறப்புக்கல்வி பயிற்சியை அளித்துள்ளார்.
ஏராளமான முனிவர்கள் மற்றும் யோகிகள் தவம் புரிந்த ஸ்தலமாகவும் இது அறியப்படுகிறது. மேலும், சலார் ஷா என்பவரின் தந்தைக்காக கட்டப்பட்டுள்ள கல்லறை ஒன்றும் இங்குள்ளது.