பரமுல்லா மாவட்டத்தில் இருக்கும் இந்த பரியாஸ்போரா நகரம் ஸ்ரீநகருக்கு 26 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. ராஜ ஷங்கர்வர்மன் என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் இந்த நகரம் காஷ்மீரின் தலைநகராகவும் இருந்திருக்கிறது.
லலித்யாதித்ட் முக்டாபிட் என்ற காஷ்மீரிய மன்னர் கிபி 8 ஆம் நூற்றாண்டில் இந்த நகரை நிர்மாணித்தார். சுற்றுலா பயணிகள் இந்த நகரில் இருக்கும் எழில்மிகு கட்டிடக் கலையை ரசிப்பதற்காக அதிகமாக செல்வதுண்டு.
குறிப்பாக இங்கிருக்கும் பரியாஸ்போரா பட்டன் மற்றும் பட்டன் பஜார் போன்ற நினைவிடங்கள் கட்டிடக் கலையின் சிறப்பை உணர்த்துகின்றன. மேலும் புத்த சமயத்தை சேர்ந்த ஸ்துபா மற்றும் மடங்களின் இடிபாடுகளை இந்த பகுதிகளில் பார்க்கலாம்.
1914 ஆம் ஆண்டு இங்கு நடந்த அகழ்வாராய்ச்சியின் போது இங்கு ராஜ் பவன், சில விஷ்ணு ஆலயங்கள், சைத்யா, புத்த அல்லது பௌத்த சமய ஆலயங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை பண்டையக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன.