பரானிலிருந்து 40 கி.மீ தொலைவில் ராம்கர் மலையில் இந்த பந்த் தேவ்ரா கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் ‘ராஜஸ்தானின் கஜுராஹோ’ என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோயில் ஒரு குளக்கரையில் அமைந்துள்ளது. தற்சமயம் தொல்லியல் துறையின் மேற்பார்வையில் இங்கு புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராம்கர் மலையில் கிஸ்னாய் மற்றும் அன்னபூர்ணா தேவி கோயில்களும் அமைந்துள்ளன. இயற்கையாக உருவான குகைகளின் உள்ளே அமைந்திருக்கும் இந்த கோயில்களுக்கு செல்வதற்கு பயணிகள் 750 படிகளை ஏறிச்செல்ல வேண்டியுள்ளது.
இந்தப்படிகள் ஜாலா ஜலீம் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ளன. இந்த தெய்வங்களில் ஒன்றுக்கு மேவா பதார்த்தமும் மற்றும் உலர்ந்த பழங்களும், மற்றொன்றுக்கு இறைச்சி மற்றும் மதுவும் நைவேத்தியங்களாக அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்தலத்தில் கார்த்திகை பௌர்ணமியின்போது விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாவில் ஏராளமான பக்தர்களும் பயணிகளும் கலந்துகொள்கின்றனர்.