பரான் நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் கிஷான்கஞ்ச் எனும் இடத்தில் இந்த பிலாஸ்கர் அமைந்துள்ளது. கேச்சி ராஜவம்ச ஆட்சியில் இது முக்கிய நகரமாக திகழ்ந்திருக்கிறது. இருப்பினும் முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் ஆணைப்படி இது அழிக்கப்பட்டுவிட்டது.
கேச்சி ராஜகுமாரியின் அழகில் மயங்கிய முகலாய மன்னர் அவரை சிறையெடுத்துவர தன் படைகளை அனுப்பியுள்ளார். அதன்படி முகலாயப்படைகள் நகரை அழித்தத்தில் மனமுடைந்த ராஜகுமாரி பிலாஸி ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டார். இன்றும் அச்சம்பவத்தின் ஞாபகார்த்தமாக கன்யாதியா என்று அந்த இடம் அழைக்கப்படுகிறது.