பரேலியில் கத்ரா மாம்ராய் பகுதியில் கொஹராப்பூர் எனும் இடத்தில் இந்த சுன்னே மியான் லட்சுமி நாராயணன் கோயில் அமைந்துள்ளது. இது புத்வாரி மசூதிக்கு அருகிலேயே உள்ளது.
பாகிஸ்தான் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். ஒரு இஸ்லாமியருக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் ஒரு கோயிலையும் கட்டிக்கொண்டுள்ளனர்.
சுன்னே மியான் எனும் அந்த இஸ்லாமியரின் பெயர் இந்த கோயிலின் பெயரோடு சேர்த்தே அழைக்கப்படுகிறது. அவரது நிஜப்பெயர் ஃபஸல் உல் ரஹ்மான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில் சுன்னே மியான் கோயில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் ஷீ ஹர்மிலாபிஜி மஹராஜ் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவை கேட்க நேர்ந்தது.
அந்த பிரசங்கத்தினால் பெரிது ஈர்க்கப்பட்ட சுன்னே மியான் தனது வழக்கு முயற்சியை கைவிட்டது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் கோயில் உருவாவதற்கு உதவினார்.
எனவே அவரை கௌரவிக்கும் விதமாக இந்த கோயிலுக்கு சுன்னே மியான் லட்சுமி நாராயணன் கோயில்என்ற பெயர் வழங்கப்பட்டது.
கோயிலுக்கு கொடை வழங்கியோர் பட்டியலில் இவரது பெயர் முதலில் இடம் பெற்றுள்ளது. இந்த கோயில் 1960ம் ஆன்டு அப்போதைய குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.