12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிந்தாமணி பர்ஷவநாத் ஜெயின் கோயில் பர்ஷவநாதர் எனும் ஜைன தீர்த்தங்கரருக்கு கட்டப்பட்டுள்ளது. ஒரு மலையின் உச்சியில் இக்கோயில் வலிமையுடன் வீற்றுள்ளது.
இந்த கோயிலின் உட்புறமானது எழிலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிலைகள் மற்றும் அலங்கார ஓவியங்களைக் கொண்டுள்ளது. மேலும், கண்ணாடி வேலைப்பாடுகளும் இதன் சுவர்களில் நுணுக்கமாக பொதிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் அக்கால கலைஞர்களின் கைவினைத்திறனை பார்வையாளர்களுக்கு அறிவிக்கின்றன.