பார்மேர் நகரத்திலிருந்து 39 கி.மீ தூரத்தில் ஹத்மா எனும் கிராமத்தில் அமைந்துள்ள கிரடு எனப்படும் இந்த கோயில் வளாகத்தில் ஐந்து கோயில்கள் வீற்றுள்ளன. இங்கு காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகளின்படி இவை 1161ம் ஆண்டு கட்டப்பட்டதாகவும், அப்போது இந்த ஹத்மா கிராமம் கிரத்கூப் என்ற பெயருடன் பன்வாரா வம்சத்தின் தலைநகராக திகழ்ந்ததாகவும் தெரியவருகிறது.
இங்குள்ள ஐந்து கோயில்களில் சோமேஷ்வரர் கோயில் மிகப்பெரியதாக காணப்படுகிறது. இது 11ம் நூற்றாண்டில் சிவபெருமானுக்காக கட்டப்பட்டுள்ளது. பல அடுக்குகளைக் கொண்ட கோபுரத்தைக்கொண்டுள்ள இக்கோயிலில் ஹிந்து கடவுள்களின் சிலைகளைக் காணலாம். கோயிலின் கர்ப்பகிருகத்தில் மூலவிக்கிரகமானது தாமரை மலரை கவிழ்த்தாற் போன்ற பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
சோமேஷ்வரர் கோயிலைத் தவிர்த்து இதர நான்கு கோயில்கள் விஷ்ணு பகவானுக்கும் சிவபெருமானுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. ராமாயண மஹாகாவியத்திலிருந்து சில காட்சிகளும் இக்கோயிலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும், கோயில் சுவர்களில் அப்சரஸ்கள் மற்றும் வியாலா சிற்பங்களும் காணப்படுகின்றன.