மேவா நகர் என்பது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கிராமமாகும். இது ஒருகாலத்தில் விரானிபூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. பார்மேர் மாவட்டத்தின் பலோதரா நகரத்திலிருந்து 9 கி.மீ தூரத்திலுள்ள ‘நாகர் கி பக்காரியா’ எனும் மலையின் அடிவாரத்தில் இந்த குக்கிராமம் அமைந்துள்ளது.
இங்குள்ள 3 ஜைன கோயில்களுக்காக இக்கிராமம் பிரசித்தி பெற்றுள்ளது. இவை தவிர ஒரு விஷ்ணு கோயிலையும் இங்கு பார்க்கலாம். இங்குள்ள மூன்று ஜைன கோயில்களில் பெரிய கோயிலானது நகோடா பர்ஷவநாதருக்காக கட்டுவிக்கப்பட்டுள்ளது.