மஹுவா தாபர் எனப்படும் நகரம் பஸ்தி நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான இடம் எனும் பெயரை பெற்றிருக்கிறது. மொஹம்மது லதீஃப் அன்சாரி என்பவர் இடைவிடாத முயற்சி மற்று ஆராய்ச்சிக்கு பின் இந்த இடத்தில் தனது முன்னோர்கள் முதல் இந்திய சுதந்திரப்புரட்சியின்போது கொல்லப்பட்டதை கண்டுபிடித்துள்ளார்.
மும்பையை சேர்ந்த வணிகரான இவருக்கு அப்போதைய குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் ஒரு நன்சான்றிதழையும் இவரது ஆராய்ச்சியை பாரட்டும்விதமாக அளித்துள்ளார்.
1857ம் ஆண்டில் மே மாதம் 10ம் நாள் மீரட் நகரில் முதல் சிப்பாய் கலகம் துவங்கிய மறு நாள் இந்த மஹுவா தாபர் எனும் இடத்தில் ஜாஃபர் அலி என்பவர் தலைமையில் புரட்சிப்படையினர் 6 ஆங்கிலேய தளபதிகள் அடங்கிய ஒரு குழுவை அவர்கள் மனோரமா ஆற்றை கடக்கும்போது கொலை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் கொதிப்படைந்த அப்போதைய பஸ்தி நகர ஆங்கிலேய டெபுடி மாஜிஸ்திரேட் டபிள்யூ பெப்பே என்பவர் 12வது பிரிவு குதிரைப்படையினர் உதவியுடன் இந்த மஹுவா தாபர் நகர்ப்பகுதியையே எரித்து அழித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
குடிமக்கள் அனைவரையும் கொன்று, வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி இந்த நகர்ப்பகுதி இருந்த சுவடே இல்லாமல் செய்து விட்டனர். மேலும் இப்பகுதியை ஒரு விவசாய நிலப்பகுதியாகவும் மாற்றிவிட்டனர்.
இந்த வரலாற்று தகவல்கள் யாவும் மொஹம்மது லதீஃப் அன்சாரி என்பவரால் திரட்டப்பட்டு தரைமட்டமாக்கப்பட்ட அந்த மஹுவா தாபர் ஸ்தலம் இதுதான் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. சுதந்திரப்போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய சம்பவம் நிகழ்ந்த ஸ்தலம் என்பதால் இந்த மஹுவா தாபர் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.