நகரத்தில் இருந்து 29கிமீ தொலைவில் உள்ள இந்த கோவில் துர்கை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். கமலா என்ற பக்தை தனது வேண்டுதலை நிறைவேற்ற முடியாததால் அம்மனை நினைத்து தவம் இருந்தாராம்.
அதனால் மகிழ்ந்த அம்மன் ஒரே வருடத்தில் அவர் முன் இரண்டு முறை தோன்றியதன் நினைவாக இங்கு வருடத்தில் இரண்டு முறை விழா கொண்டாடப்படுகிறது.