பேலூருக்கு விஜயம் செய்யும் பயணிகள் தவறாமல் தரிசிக்க வேண்டிய மற்றொரு கோயில் இந்த சென்னிகராயா கோயிலாகும். ஹொய்சளர் காலத்தில் ஷாந்தலா தேவியால் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் வீரநாராயணா கோயில் வளாகத்தில் உள்ளது.
இதன் உட்புறத்தில் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களைக் காணலாம். வீரநாராயணா, சௌம்யநாயகி மற்றும் ஷீதேவி – பூதேவி கடவுள்களுக்கான தனித்தனி சிறு கோயில்கள் இதனுள் அமைந்துள்ளன.