பேலூரில் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் விஷ்ணு சமுத்ரம் என்று அறியப்படும் இந்தப் பெரிய புனிதக்குளமாகும். இந்த குளமானது நரசிம்ம ராயர் காலத்தில் பத்மராசா மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ளது.பொற்காலம் என்றறியப்படும் விஜயநகர சாம்ராஜ்ய ஆட்சியில் இது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணதேவராயர் காலத்தில் உத்பதனஹள்ளியைச்சேர்ந்த பாஸப்ப நாயக்கர் இதன் வடபகுதியை நான்முனை வடிவமைப்பாக மாற்றி மூன்று பகுதிகளில் படிக்கட்டுகளையும் எழுப்பியுள்ளார். இப்படிகட்டுகளின் வழியாக பக்தர்கள் இந்த குளத்தில் புனித நீராடல் மற்றும் சடங்கு வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
மேலும் அவர் ‘தெப்ப உற்சவ’த்திற்கு பயன்படுமாறு இந்த புஷ்கரணியின் நடுவில் ஒரு மண்டபத்தையும், பக்தர்கள் தங்குவதற்கான ஒரு சாவடியையும் எழுப்பியுள்ளார்.