கார்த்திகை தீபோத்ஸவ ஸ்தம்பம் அல்லது மஹாஸ்தம்பம் என்று அழைக்கப்படும் இந்த 42 அடி உயர விளக்குத்தூண் அமைப்பு சென்னக்கேசவ கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. அடிப்பிடிமானப்பூச்சு எதுவுமே இல்லாமல் ஒரு ஒற்றைக்கல் மேடையின் மீது இந்த தூண் நிறுத்தப்பட்டுள்ளது ஒரு பிரமிப்பூட்டும் அம்சமாகும்.
தன் எடையின் பிடிப்பிலேயே இந்த தூணின் அடிப்பகுதியானது மூன்று புறம் மேடையில் படிந்து நிற்குமாறும் நான்காவது புறம் மேடையை தொடாதவாறு சற்றே இடைவெளியுடனும் காணப்படுகிறது. பயணிகள் கண்கூடாக இந்த இடைவெளியை பார்க்கலாம்.
புவியீர்ப்பு சக்தி எனும் அறிவியல் தத்துவத்தை புரிந்து அமைக்கப்பட்டுள்ள இந்த தூண் கட்டுமான அமைப்பு அக்காலத்திய விஜய நகர சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலை மேன்மையை பிரதிபலிக்கும் விதமாக உயர்ந்து நிற்கிறது.