மந்திரிதி சித்த பைரவி கோவில் சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலையில் ஒடிசா ஆந்திர எல்லையில் உள்ள இந்த கோவிலுக்கு இருமாநில பக்தர்களும் வருகிறார்கள்.
சமீபத்தில் 108 சிலைகளுடன் கூடிய கருவறை கட்டப்பட்டது. பைரவி அம்மனின் சிலையை ஒரு விவசாயி கண்டெடுத்தபின் அப்படியே இங்கு நிறுவப்பட்டது.
கடலில் பயணம் செய்கிறவர்கள் இங்கு அதிகமாக வந்து தங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்க அம்மனை வழிபடுகிறார்கள். செவ்வாய், சங்கராந்தி மற்றும் மஹாசப்தமி ஆகிய நாட்களில் இங்கு பக்தர்கள் வருகிறார்கள்.