நாராயணி கோவில் பெஹ்ராம்பூரில் இருந்து 80கிமீ தொலைவில் உள்ளது. இங்குள்ள காடுகளின் வழியே ஓடும் வற்றாத ஓடை இவ்விடத்திற்கு இயற்கை எழிலை அள்ளி வழங்குகிறது.
நாராயணி கோவிலி உள்ள மா துர்கா சிலை புனிதமானதாகவும், வல்லமை நிறைந்ததாகவும் கருதப்படுவதால் திருவிழாவின் போது இங்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள்.
சக்திவாய்ந்த கடவுளாக கருதப்படும் மா தேவி துர்கா இந்தியாவெங்கும் பல இனத்தவர்களால் வழிபடப்படுகிறது. இப்பகுதி பழங்குடிகள் காலம்காலமாக வழிபட்டு வந்த கல்லை மாற்றி பத்து கைகளுடன் கூடிய சிலையை சமீபத்தில் நிறுவியிருக்கிறார்கள்.