இரட்டை அம்மன்களான தாரா மற்றும் தாரிணி ஆகியோருக்கு பெஹ்ராம்பூரில் இருந்து 32கிமீ தொலைவில் உள்ல இந்தக் கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ருஷிகுல்யா நதி இவ்வழியாக ஓடுவதால் காண்பதற்கும் இக்கோவில் அழகாக காட்சியளிக்கிறது. சித்திரை மாதத்தில் ஏராளமான பக்தர்கள் இங்கு குவிகிறார்கள்.
வருமான ஆணையத்தின் பங்களா இந்த இடத்தில் உள்ளதால் பயணிகள் அதில் தங்கிக்கொள்ளலாம். பெஹ்ராம்பூரில் இருந்து இங்கு பேருந்து சேவைகள் உள்ளன. புருஷோத்தம்பூரில் உள்ள கோவில் இருக்கும் தாராதாரிணி குன்று ஏறத்தாழ 180ஏக்கரில் அமைந்துள்ளது.