பத்ராச்சாலம் நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில், கம்மம் மாவட்டத்தின் தும்முகுடேம் மண்டலத்தில் அமைந்திருக்கிறது பர்ணசாலா கிராமம். இந்த கிராமத்தில் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி தன்னுடைய 14 வருட வனவாசத்தின் சில காலங்களை சீதா தேவி மற்றும் லக்ஷ்மனனுடன் கழித்ததாக சொல்லப்படும் புராணச் செய்தியால் பர்ணசாலா கிராமம் புனித யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்களிடையே பிரபலமாக அறியப்படுகிறது.
அதோடு இராம பிரான் பர்ணசாலா கிராமத்தின் காடுகளில்தான் குடிசை கட்டி வசித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்துக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் ஓடையில்தான் சீதா தேவி இராமாயண காலத்தில் நீராடியதாகவும், துணிகளை சுத்தம் செய்ததாகவும் நம்பப்படுகிறது.