சூன்ஸ் என்று அழைக்கப்படும் கங்கை நதி டால்பின் மீன்களின் முக்கியமான சரணாலயமாக விக்ரம்ஷீலா கங்கை டால்பின் சரணாலயம் உள்ளது. இந்த சூன்கள் அழிந்து வரும் உயிரினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சரணாயலம் அழிந்து வரும் உயிரினமாக கருதப்படும் நன்னீர் ஆமைகள் மற்றும் 135 வகையான நீர்வாழ் உயிரினங்களை பாதுகாத்து வரும் வளமான பல்லுயிர்பெருக்க சரணாலயமாக உள்ளது. இந்த சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் ஜுன் மாதங்களில் வருகை தரலாம்.