பழங்கால இந்தியாவில் பாலர்கள் வம்சத்தில் இருந்த முக்கியமான 2 பௌத்த கல்வி மையங்களில் ஒன்றாக விக்ரம்ஷீலா பல்கலைகழகம் இருந்தது. பௌத்த கோட்பாடுகளை பரப்புவதில் நாளந்தா பல்கலைக்கழகத்துடன் ஒப்பிடப்பட்டு வரும் சிறந்த கல்வி நிலையமாக விக்ரம்ஷீலா பல்கலைக்கழகம் இருந்தது.
நாளந்தா பல்கலைக்கழகத்தின் தரம் குறைவதாக எண்ணிய தர்மபாலர் என்ற அரசர் விக்ரம்ஷீலா பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்.
ஒரு பெரிய சதுர வடிவிலான மடாலயத்தின் மையத்தில் ஒரு ஸ்தூபியும், நூலக கட்டிடமும் மற்றும் பல்வேறு ஸ்தூபிகளும் உள்ள இவ்விடத்தைக் காண்பது அற்புதமான காட்சியாக இருக்கும். இவ்விடத்தில் ஒரு திபெத்திய கோவிலும் மற்றும் இந்து கோவிலும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டுள்ளன.