பரத்பூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் தீக் கோட்டை, 1730-ஆம் ஆண்டு சுராஜ் மால் மகாராஜாவ்ல் கட்டப்பட்டது. இந்த கோட்டை ஜட் ஆட்சியாளர்களின் தலைநகராக விளங்கிய தீக் நகரில் அமைந்திருக்கிறது.
தீக் கோட்டையின் மைய கோபுரம் ஆழமில்லாத கால்வாய்க்கு நடுவில் உயர்ந்து நின்று கொண்டிருக்கிறது. இங்கு மொத்தம் இதுபோல 12 கோபுரங்கள் கட்டப்பட்டிருகின்றன.
இதில் லக்ஹா புர்ஜ் என்ற கோபுரமே உயரமானதாக அறியப்படுகிறது. இந்த லக்ஹா புர்ஜ் கோபுரம் கோட்டையின் வடமேற்கு ஓரத்தில் உள்ளது. மேலும் 8 கிலோமீட்டர் நீள மதில்சுவர் இந்தக் கோட்டைக்கு எல்லையாக அமைந்திருக்கிறது.
தீக் கோட்டையின் முக்கியமான பகுதியாக பாதுக்காக்கப்பட்டு வரும் சுராஜ் மால் ஹவேலி, பங்கல்தார் கட்டிடக்கலை பாணியில் வடிமைக்கப்பட்டிருக்கும் பேரற்புதம். இதுதவிர சர்பாக் பாணியில் உருவாகப்பட்டிருக்கும் தோட்டங்களும், பெர்சியன் பாணி வடிவமைப்பும் கோட்டையின் அழகுக்கு அழகு சேர்ப்பவை. எனினும் கோட்டையின் உட்புறப் பகுதிகள் இன்று வெறும் சிதைவுகளாகவே எஞ்சியுள்ளன.
தீக் கோட்டைக்கு அருகாமையில் தான் தீக் அரண்மனையும் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை புராணா மஹால், ஷீஸ் மஹால், சுராஜ் மஹால், நந்த் மஹால், கிஷான் பவன், கேஷவ் பவன், கோபால் பவன் என்று பற்பல பகுதிகளின் கதம்பமாக காட்சியளிக்கிறது.