ராஜஸ்தானில் உள்ள கோட்டைகளிலேயே தனித்துவமான கட்டிடக்கலை பாணியை கொண்ட லோஹாகர் கோட்டை சுராஜ் மால் மகாராஜாவால் கட்டப்பட்டது. இந்தக் கோட்டை ஆங்கிலேயர்களின் அசுர தாக்குதல்களிலிருந்தெல்லாம் தப்பித்து இன்றும் இரும்பு போல அப்படியே நிலைத்து நிற்கின்ற காரணத்தால் இது இரும்புக் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.
லோஹாகர் கோட்டை மஹால் காஸ், கம்ரா மஹால், புராணா மஹால் என்று மூன்று பகுதிகளை கொண்டது. இதில் கம்ரா மஹால் தற்போது அரசு தொல்பொருள் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் கிஷோரி மஹால், கோத்தி காஸ், மோட்டி மஹால், ஜவஹர் புர்ஜ் மற்றும் பதே புர்ஜ் போன்ற நினைவுச் சின்னங்கள் கோட்டையின் வளாகத்துக்குள்ளேயே இருக்கின்றன.