1891ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த கலங்கரை விளக்கம் பட்கல் நகரின் முக்கிய சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. பட்கல் ஆற்று முகத்துவாரத்தில் ஒரு மலையின்மீது பட்கல் கோட்டைக்கு அருகாமையிலேயே இந்த கலங்கரை விளக்கம் அமைந்துள்ளது.
ஒரு வெள்ளைத்தூண் கோபுரமாக இருந்த இது 1936ம் ஆண்டு புயல் எச்சரிக்கை சின்னம் மற்றும் விளக்கு பொருத்தப்பட்டு கலங்கரை விளக்கமாக மாற்றப்பட்டுள்ளது. இன்றும் இதில் ஒரு இரட்டை திரி விளக்கும் கற்தூண் வடிவமும் உள்ளன.
1956 -58ம் ஆண்டுகளில் இதன் அருகிலேயே ஒரு துணை விளக்கு அறை அமைக்கப்பட்டு அதில் புகை படியா கண்ணாடிச்சுவரும் பொருத்தப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு மார்சி 21ம் நாள் ஒரு நவீன மெட்டல் ஹாலைடு விளக்கு இந்த கலங்கரை விளக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது.