பட்கல் நகருக்கு விஜயம் செய்யும் பயணிகள் நேரம் இருப்பின் இந்த கேதப்பய்ய நாராயணா கோயிலுக்கு அவசியம் விஜயம் செய்யலாம். இது விஜயநகர பாணி கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ளது.
விஜயநகர சாம்ராஜ்யத்தின் பல்வேறு அடையாளங்களும் சிற்பவடிப்புகளும் இந்த கோயிலில் காணப்படுகின்றன. நான்கு தூண்களுடன் காட்சியளிக்கும் நவரங்க மண்டபத்தில் அஷ்டதிக் பாலகர்களைக்கொண்ட அமைப்பை இந்த கோயிலில் பயணிகள் காணலாம்.
மேலும் வனவாசம், ராமாயணம், ராமபட்டாபிஷேகம், புத்திர காமேஷ்டி போன்ற பல்விதமான புராணிக மற்றும் மஹாகாவிய நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் சிற்ப வடிப்புகள் இந்த கோயில் சுவர்களில் இடம் பெற்றுள்ளன.
கோயில் வாசலில் கொடித்தூண் எனப்படும் துவஜஸ்தம்பம் கோயிலின் அழகை கூட்டும் வகையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த கோயிலின் தீவிர பக்தரும் புரவலருமான கேட்டா பாய் மற்றும் அவரது துணைவியாரின் சிற்ப வடிப்பும் இங்கு கோயிற்சிலையின் அருகில் காணப்படுகிறது.