1859 ஆம் ஆண்டு, ஜெர்மேனிய கட்டிடக் கலை நிபுணரைக் கொண்டு கட்டப்பட்டது நிலம்பாக் அரண்மனை. ஜெர்மேனியரால் கட்டப்பட்டிருந்தாலும், இந்திய கட்டிடக்கலையும் உள்ளடக்கியவாறு அமைந்திருக்கிறது இந்த அரண்மனை.
தற்போது அரச குடும்பத்தினர் இந்த அரண்மனையில் தான் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஐந்து நட்சத்திர தரத்தில் அமைந்திருக்கும் ஒரே இடம் இந்த அரண்மனை தான்.