குஜராத் மாநிலத்தில் பாவ்நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது தக்தேஷ்வரர் திருக்கோவில். இந்தக் கோவில் மலை உச்சியில் அமைந்திருப்பதால், இங்கிருந்து பார்த்தால் பாவ்நகர் முழுவதும் தெரியுமாம். 1893 ஆம் ஆண்டு தக்த்சின்ஜி எனும் பக்தரால் இந்தக் கோவில் கட்டப்பட்டது.