குஜராத் மாகாணத்தில், பாவ்நகர் மாவட்டத்தில், சௌராஷ்ட்ராவில் உள்ள பாள் பகுதியில் அமைந்திருக்கிறது வெளாவடார் தேசியப் பூங்கா. பாவ்நகர் மகராஜாவின் வேட்டைக்காடாக இருந்த இந்த இடத்தில், 1976 ஆம் ஆண்டு பூங்கா அமைக்கப்பட்டது. நரி, குள்ள நரி, கட்டுப்பூனை போன்ற பல விலங்கினங்கள் இங்கு உள்ளன.