பீமாஷங்கர் கிராமப்பகுதியில் 2100 அடி மற்றும் 3800 அடி உயரத்தில் 100 ச.கி.மீ பரப்பளவில் இந்த பீமாஷங்கர் காட்டுயிர் சரணாலயம் அமைந்துள்ளது. இது வளமான சஹயாத்திரி மலைப்பகுதியை ஒட்டி எல்லா திசைகளிலும் பசுமையான வனப்பகுதி சூழ அமைந்துள்ளது.
இந்த சரணாலயத்தில் பல அரிய விலங்கினங்களான ஷேக்ரு எனப்படும் இந்திய ராட்சத அணில், கழுதைப்புலி, பறக்கும் அணில், குரைக்கும் மான், சிறுத்தை, முள்ளம்பன்றி மற்றும் காட்டுப்பன்றி போன்றவை வசிக்கின்றன.
மேலும், இந்த பீமாஷங்கர் காட்டுயிர் சரணாலயத்தில் பறவை ரசிகர்கள் மற்றும் இயற்கைப்பிரியர்கள் பெரிதும் விரும்பக்கூடிய மலபார் விசில் குருவி, மலபார் அரிவாள் மூக்கன் மற்றும் பழுப்பு காட்டுக்கோழி போன்ற பலவகை பறவையினங்களையும் காணலாம்.
இந்த காட்டுயிர் சரணாலயத்தை மழைக்காலத்தில் விஜயம் செய்து பார்ப்பது சிறந்தது. இக்காலத்தில் பலவிதமான தாவர வகைகள் மற்றும் மூலிகைச்செடிகளை அவற்றின் பசுமையான தோற்றத்தில் கண்டு ரசிக்கலாம்.