கூண்டி என்பது போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றாகும். சர்க்கார் பாபா அல்லது பகவான் ராம் என்றழைக்கப்படும் உலகப் புகழ் பெற்ற துறவி அவதூத் பகவான் ராமின் பிறப்பிடமாக திகழ்கிறது கூண்டி.
இவர் இங்கு 1937-ஆம் வருடம் பிறந்தார். இந்த கிராமத்துக்கு ஒவ்வொரு வருடமும் பல சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் போகிறது.