ஷாம்லா மலைகளின் மேல் சுமார் 200 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்திருக்கும் மனித குல மியூசியம் அப்பர் லேக் ஏரியின் சுற்று வட்டக் காட்சியைக் காட்டும் இடமாகவும் இருக்கிறது.
1977-ல் திறக்கப்பட்ட, நாட்டிலேயே மிகப்பெரிய திறந்த வெளி மானிடவியல் மியூசியமான சங்கராலயா மனித குல வரலாற்றை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கத்திற்காகவே வருடம் முழுவதும் திறந்த வெளி மற்றும் உள்ளரங்கு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கண்காட்சிகள் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம், கலை மற்றும் கட்டிடக்கலை சிறப்புகளை வெளிப்படுத்தி, அவற்றைப் பற்றி சிறந்த வகையில் தகவல்கள் அளிப்பவையாக உள்ளன.
இந்த வகையில் இந்தியாவில் இருக்கும் ஒரே மியூசியமான இது வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்களையும் மற்றும் அவற்றைப் பற்றிய நீண்ட தகவல்களையும் கொண்டுள்ளது.
இங்கிருக்கும் ‘வீதி சங்குல்’ என்ற உள்ளரங்கு அருங்காட்சியகத்தில், உயிரியல் மற்றும் கலாச்சார பரிணாம வளர்ச்சியைப் பற்றி 13 வகையான ஓவிய காட்சிகள் பல்வேறு தலைப்புகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியம் தற்பொழுது இந்திரா காந்தி ராஷ்டிரிய மானவ் சங்கராலயா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.