போபால் நகரத்திலுள்ள தாஜ்—உல் மசூதி அந்நகரின் முஸ்லீம்களின் முக்கியமான இடமாகவும் மற்றும் அடையாளமாகவும் உள்ளது. நாட்டிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் அழகிய மசூதிகளில் ஒன்றாக இருக்கும் இது மனதை மயங்கச் செய்யும் பிரமிக்கத்தக்க வடிவமைப்பினை பெற்றுள்ள இடமாகும்.
தாஜ்-உல் மசூதி என்றால் 'மசூதிகளின் இராணி' என்று அர்த்தமாகும். இந்த பொருளுக்கேற்ற இடமாகவே இந்த மசூதி உள்ளது. அற்புதமான இளஞ்சிவப்பு வண்ண சுவர்களும், பிரம்மாண்டமான வெள்ளை கோபுரங்களில் குவிந்த வடிவிலான கூரைகளையும் கொண்டுள்ள இடமாகவும் இந்த மசூதி உள்ளது.
இரவில் ஒளிவெள்ளத்தில் இந்த மசூதி மின்னுவதை காணும் போது அது மூச்சைத் திணறடிக்கும் காட்சியாக இருக்கும். பிரம்மாண்டமான வகையில் கட்டப்பட்டிருக்கும் இந்த மசூதி ஒரு கட்டிடக்கலை அதிசயமாகவும் மற்றும் இதன் மற்ற சிறப்பம்சங்கள் இதன் அழகை மெருகேற்றுவதாகவும் உள்ளன.
அழகுற செதுக்கப்பட்டுள்ள தூண்கள் மற்றும் மார்பிள் தளங்களை உடைய மிகப்பெரிய கூடம் ஒன்றும் இந்த மசூதியில் உள்ளது. மேலும், இங்கு வரும் மக்கள் சூரியனின் சுட்டெறிக்கும் கதிர்களில் இருந்து தப்பித்து, நிழலில் ஓய்வெடுக்க வசதியாக ஒரு மிகப்பெரிய தோட்டப்பகுதியும் இந்த மசூதிக்கு அருகில் உள்ளது.