மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரிகளில் நம் நாட்டிலேயே மிகவும் பழமையான ஏரியாக அப்பர் லேக் ஏரி உள்ளது. 11-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி உள்ளூர் மக்களால் பாடா தலாப் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
கோலன்ஸ் நதிக்கரையின் மேல் மாபெரும் கரைகளுடன் உள்ள இந்த ஏரி இந்தியாவிலேயே மிகவும் அழகிய ஏரியாக அறியப்படுகிறது. புராணங்களில் போஜ ராஜனின் ஆணையால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்த ஏரியின் தண்ணீர் போஜ ராஜனின் நோயைத் தீர்க்கவல்லதாக கருதப்பட்டதாகும்.
மிகவும் பரந்த பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏரி மிகப்பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் உள்ளது. அப்பர் லேக் ஏரியின் தண்ணீர் தான் போபால் நகர வீடுகளுக்கு குடிநீராக விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த ஏரியை அழகுபடுத்தும் பொருட்டாக இங்கு உருவாக்கப்பட்டுள்ள கமலா பார்க், இப்பகுதியின் அழகை மேலும் கூட்டுவதாகவே உள்ளது.