புத்த ஜயந்தி பார்க் எனப்படும் இந்த பூங்கா புத்தரின் போதனைகளுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. கலிங்கப்போருக்கு பின் ஒடிஷா மாநில மக்கள் அமைதி வழியில் தங்கள் வாழ்க்கையை தொடர்வதற்கு புத்தரின் அமைதித்தத்துவங்கள் ஒரு வழிகாட்டு நெறியாக பின்பற்றப்பட்டன. எனவே புத்தரின் புத்தரின் நெறிகளை ஞாபகப்படுத்தும் விதமாக இந்த பூங்கா புபனேஷ்வர் நகர வளர்ச்சி ஆணையத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சந்திரசேகர்பூர் எனும் இடத்தில் 44 ஏக்கர் பரப்பளவில் கம்பீரமான அழகுடன் இந்த பூங்கா அமைந்துள்ளது. ஒரு பீடம் போன்ற மேட்டுப்பகுதியில் இந்த பூங்கா நிர்மாணிக்கப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
சந்தகா இயற்கை வனப்பகுதி இந்த பூங்காவுடன் தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அமைதியாக நடைபயிலவும் இயற்கை அழகை ரசித்தபடி தனிமையில் பொழுதுபோக்கவும் இது மிகவும் ஏற்றது. நிசப்தம் மற்றும் பறவைகளின் கீச்சொலிகள் நிறைந்த இந்த பூங்காச்சூழல் மனதை சாந்திப்படுத்தும் இயல்பை கொண்டிருக்கிறது.