சந்தகா காட்டுயிர் சரணாலயம் புபனேஷ்வர் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது 175.79 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. 1982ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு யானைகள் காப்பகமாக இது முதலில் உருவாக்கப்பட்டது.
இந்த சரணாலயம் பல்வேறு உயிரினங்கள் மற்றும் நிறைந்த செழிப்பான வனப்பகுதியாகும். பெரும்பாலும் யானைகள் இங்கு அதிகமாக வசிக்கின்றன.
இவை தவிர சிறுத்தை, குரைக்கும் மான், காட்டுப்பன்றி, எறும்புத்திண்ணி, இந்திய ஓநாய் மற்றும் இதர விலங்குகளும் இங்கு வாழ்கின்றன. பல்வேறு பறவை இனங்களும் இந்த சரணாலயத்தை இருப்பிடமாக கொண்டுள்ளன. ஊர்வன ஜந்துக்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன.
இந்த சரணாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்சி கோபுரங்களின் மீதிருந்து சுற்றுலாப்பயணிகள் விலங்குகள் மற்றும் காட்டு உயிரினங்களை பார்த்து ரசிக்கலாம்.
இந்த சரணாலத்தின் உள்ளேயே தெராஸ் அணை மற்றும் ஜும்கா அணை எனப்படும் இரண்டு நீர்த்தேக்கங்களும் அமைந்துள்ளன. இவற்றை ஒட்டி பயணிகள் தங்குவதற்கான காட்டேஜ் வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.