தௌலிகிரி எனும் இந்த மலைப்பகுதி புபனேஷ்வர் நகரில் மற்றொரு சுவாரசியமான சுற்றுலா அம்சமாக அமைந்திருக்கிறது. மவுரிய சாம்ராஜ்யத்தை ஆண்ட அசோக சக்ரவர்த்தியின் காலத்தில் பொறிக்கப்பட்ட பாறைக்கல்வெட்டு ஆணை ஒன்று இந்த மலையில் காணப்படுகிறது. காலத்தால் அழியாது காட்சியளிக்கும் இந்த பாறைக்கல்வெட்டு 3ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது ஒரு வியக்கத்தக்க உண்மையாகும்.
தௌலிகிரி ஸ்தலம் வரலாற்று ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. மேலும், ரம்மியமான இயற்கைச்சூழலின் நடுவே ஒரு அமைதி ஸ்தலமாகவும் இந்த தௌலிகிரி மலைப்பகுதி காட்சியளிக்கிறது. நெடுநேரம் அமர்ந்து இயற்கைச்சுழலை ரசிப்பதற்கு இது மிகவும் ஏற்ற இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தௌலிகிரி மலைப்பகுதியில்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலிங்கப்போர் நடைபெற்றது என்றும் கூறப்படுகிறது. இந்த இடத்தில் புத்த மதச்சின்னங்கள் ஏராளமாக காணப்படுகின்றன.
இந்த மலையின் உச்சியில் ஒரு வெந்நிற பகோடா கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. 1970ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்த பகோடா கோயில் மலையின் அழகுக்கு அழகூட்டும் வகையில் வீற்றிருக்கிறது.