காந்தி பார்க் எனும் இந்த பூங்கா புபனேஷ்வர் நகரில் மஹாத்மா காந்தி அவர்களது பெயரில் அமைந்துள்ளது. இது புபனேஷ்வர் நகர வளர்ச்சி ஆணையத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
புபனேஷ்வர் நகரத்தில் உள்ள ஸ்வோஸ்தி பிளாசா ஓட்டலுக்கு எதிரே இந்த பூங்காவை காணலாம். அழகிய புல்வெளிகள் மற்றும் அலங்கார அம்சங்களுக்கு இது பிரசித்தமாக அறியப்படுகிறது.
இந்த பூங்காவில் தியானத்தில் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் மஹாத்மா காந்தி சிலையை பார்க்கலாம். பூங்காவின் சூழலுக்கு ஒரு கம்பீர தோற்றத்தை அளிக்கும் வகையில் இந்த சிலை வீற்றிருக்கிறது.
காலைநேர ஓட்டப்பயிற்சி, நடைப்பயிற்சி, இயற்கைச்சூழல் ரசனை, காற்று வாங்கல் போன்றவற்றுக்கு இந்த பூங்கா மிகவும் ஏற்றதாக உள்ளது.
முன்னர் ஜண்டா மைதான் என்று அழைக்கப்பட்ட ஒரு மைதானத்தில்தான் இந்த பூங்கா வடிவமைக்கப்பட்டிருக்கிறது. புல்வெளிகள், ஓட்டப்ப்பாதைகள், நீரூற்றுகள் மற்றும் விளக்கு அமைப்புகள் போன்றவை இந்த பூங்காவின் சிறப்பம்சங்களாகும்.