நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பார்க் எனும் இந்த பூங்கா புபனேஷ்வர் நகரின் மற்றொரு அழகுப்பூங்காவாகும். மிகச்சிறந்த சுதந்திரப்போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை கௌரவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இது அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது.
புபனேஷ்வர் நகரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகவும் இது பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த பூங்காவில் நடைப்பாதைகள், நீர்த்தெளிப்பான்கள், விளக்கு அமைப்புகள், ஓட்டப்பாதைகள் போன்றவை சிறந்த முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பார்வையாளர்கள் வசதிக்காக பெரிய இருக்கைகளும் பூங்காவில் ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ளன. சுத்தமான காற்று மற்றும் பசுமையான சூழல் போன்றவறை கொண்டுள்ள இந்த பூங்கா பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் காட்சியளிக்கிறது.
உள்ளூர் மக்கள் மற்றும் பயணிகள் இந்த பூங்காவிற்கு தினமும் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும் இந்த பூங்கா பொது மக்களுக்கு திறக்கப்படுகிறது.