புபனேஷ்வர் நகரத்தில் உள்ள இந்த ராஜாராணி கோயில் புராதன கட்டிடக்கலைஞர்களின் திறமைக்கு சான்றாக வீற்றிருக்கிறது. 11ம் நூற்றாண்டில் மத்தியில் கட்டப்பட்ட இந்த கோயில் லிங்கராஜ் கோயிலுக்கு வடகிழக்கே அமைந்துள்ளது.
இதன் கருவறையில் எந்த தெய்வச்சிலையும் வைக்கப்படாது வெறுமையாக காட்சியளிப்பது இந்த கோயிலின் ஒரு தனித்தன்மையான அம்சமாக கூறப்படுகிறது. இது மன்மதக்கலைக்காக எழுப்பப்பட்ட கோயிலாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஏனெனில் இந்த கோயிலைச்சுற்றிலும் ஆண் பெண் சிருங்கார சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. மஞ்சள் நிற மணற்பாறைக்கற்களால் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய தொல்லியல் துறை இக்கோயில் வளாகத்தை பராமரித்து நிர்வகிப்பது மட்டுமல்லாமல் நுழைவுக்கட்டணம் ஒன்றையும் பார்வையாளர்களிடம் வசூலிக்கிறது.