கலை அபிமானிகள் இந்த இடத்தை மிகவும் விரும்புவர். புஜ் நகரிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறு நகரமான புஜோடி, பெரும்பாலான மக்கள் தேர்ந்த கைவினைக் கலைஞர்களாகத் திகழும் தனித்தன்மை வாய்ந்த ஒரு நகரமாகும்.
கட்ச் பகுதியின் துணியக மையமான இங்கு, ஏராளமான கலை வல்லுநர்கள், நெசவாளர்கள் மற்றும் அச்சுரு வினைஞர்களைப் பார்க்கலாம். கைவினைக் கலைஞர்களுக்கு தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பினை வழங்கும் ஆஷாபுரா கைவினைப் பொருட்கள் பூங்கா மற்றும் லாபநோக்கற்ற நிறுவனமான ஷ்ருஜன் ஆகியவை புஜோடிக்கு அருகில் அமைந்துள்ளன.
ஆஷாபுரா பூங்கா வாரயிறுதிகளில் கண்காட்சியோடு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் வழங்கும் அதே வேளையில் ஷ்ருஜன் வளாகம் கண்காட்சியோடு ஒரு உற்பத்தி மையத்தையும் உள்ளடக்கியுள்ளது.